செய்திகள்

சிங்காரபேட்டை அருகே இருதரப்பினரிடையே மோதல்- 6 பேர் கைது

Published On 2019-05-13 17:40 GMT   |   Update On 2019-05-13 17:40 GMT
சிங்காரபேட்டை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேரை போலீசார் கைது செய்து ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரபேட்டை அருகே சந்தை செயல்பட்டு வருகிறது. சந்தைக்கு செல்லும் வழியில் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனது மோட்டார்சைக்கிளை கொண்டு வந்து நிறுத்தினார். அப்போது அங்கு வந்த குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த இளவரசன் (வயது 30), திருப்பதி (21), அஜீத் (24), பிரவீன் (25) ஆகிய 4 பேரும் சேர்ந்து வெங்கடேசன் வண்டி நிறுத்தியது குறித்து அவரிடம் கேட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4பேரும் சேர்ந்து வெங்கடேசனை தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து வெங்க டேசன் சிங்காரபேட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இளவரசன், அஜித், திருப்பதி ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேசன் தரப்பினரை சேர்ந்த ராஜி, சென்னகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோர் சேர்ந்து தங்களை தாக்கியதாக 3 பேர் மீது அஜித் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் ராஜி, வெங்கடேசன், சென்னகிருஷ்ணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஜெயமோகனும், பிரவீனும் தலைமறைவாக உள்ளளர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News