செய்திகள்

பேரூர் அருகே சமையல் செய்த போது உடல் கருகி பெண் பலி

Published On 2019-05-08 11:06 GMT   |   Update On 2019-05-08 11:06 GMT
பேரூர் அருகே சமையல் செய்த போது உடல் கருகி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சக்தி. இரவது மனைவி ஜோதி (வயது 22). இவர் மிட்டாய் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் மண்எண்ணை அடுப்பில் உணவு சமைத்துக்கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஜோதியின் உடையில் தீ பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஜோதியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜோதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News