செய்திகள்

மாமல்லபுரம் அருகே மாயமான பெண் பிணமாக கிடந்தாள்- போலீசார் விசாரணை

Published On 2019-04-22 13:37 GMT   |   Update On 2019-04-22 13:37 GMT
மாமல்லபுரம் அருகே மாயமான பெண் எச்சூர்காட்டு பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தாள். அவர் எப்படி இறந்தார். என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் பிரசாத கடை நடத்தி வந்தவர் சுனிதா (வயது32). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து சுனிதா கணவரின் சகோதரியுடன் சேர்ந்து கடையை நடத்தி வந்தார்.

கடந்த 7-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சுனிதா திரும்பி வரவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாமல்லபுரம் அடுத்த எச்சூர்காட்டு பகுதியில் அழுகிய நிலையில் சுனிதா பிணமாக கிடந்தாள்.

மாமல்லபுரம் போலீசார் உடலை மீட்டு சுனிதா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து உடலை காட்டுக்குள் வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News