செய்திகள்

சென்னையில் வருமான வரித்துறை சோதனை - கட்டுமான நிறுவனத்தில் ரூ.13.5 கோடி பறிமுதல்

Published On 2019-04-12 15:46 GMT   |   Update On 2019-04-12 15:46 GMT
சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் இருந்து 13.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #IncomeTaxRaid
சென்னை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனைகளில் பலகோடி ரூபாய் பணம் சிக்கி உள்ளது.

இதேபோல், வருமான வரித்துறையினரும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் இருந்து 13.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையிலுள்ள நிறுவனத்தின் 3 இடங்கள் மற்றும் நாமக்கல்லில் உள்ள 4 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #IncomeTaxRaid
Tags:    

Similar News