செய்திகள்
தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
டாஸ்மாக் கடையில் விற்பனை நேரத்தை இரவு 10 மணி என்பதை 8 மணியாக குறைக்க வேண்டும், தொண்டராம்பட்டு டாஸ்மாக்கில் பணிபுரியும் விற்பனையாளர்களான ரமேஷ், கலையரசன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி மற்றும் மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவடட தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் வீரயையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் கடையில் விற்பனை நேரத்தை இரவு 10 மணி என்பதை 8 மணியாக குறைக்க வேண்டும், தொண்டராம்பட்டு டாஸ்மாக்கில் பணிபுரியும் விற்பனையாளர்களான ரமேஷ், கலையரசன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி மற்றும் மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவடட தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் வீரயையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.