செய்திகள்

ரெயில் பாதை பராமரிப்பு பணி - மதுரை ரெயில் போக்குவரத்து 1ந் தேதி முதல் மாற்றம்

Published On 2019-03-30 10:02 GMT   |   Update On 2019-03-30 10:02 GMT
ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை ரெயில் போக்குவரத்து 1-ந் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது.
மதுரை:

மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை கோட்டத்தில் ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக, வருகிற 1-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை கீழ்க்கண்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி நெல்லை-மயிலாடுதுறை (வண்டி எண்:56822) ரெயில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை திண்டுக்கல்-திருச்சி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:-16352) 7-ந்தேதி திருச்சிக்கு 1 மணி நேரம் தாமதமாக செல்லும்.

குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16128) ஏப்ரல் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை திருச்சிக்கு அரை மணி நேரம் தாமதமாக செல்லும்.

நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16352) ஏப்ரல் 14, 21, 28 ஆகிய தேதிகளில் திருச்சிக்கு 1 மணி நேரம் தாமதமாக செல்லும்.

மதுரை- கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 17616) ஏப்ரல் 14, 21, 28 ஆகிய தேதிகளில் திருச்சிக்கு அரைமணி நேரம் தாமதமாக செல்லும்.

நாகர்கோவில்- கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16354) ஏப்ரல் 16, 23, 30 ஆகிய தேதிகளில் திருச்சிக்கு அரைமணி நேரம் தாமதமாக செல்லும்.

கன்னியாகுமரி- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12666) ஏப்ரல் 14, 21, 28 ஆகிய தேதிகளில் திருச்சிக்கு அரைமணி நேரம் தாமதமாக செல்லும்.

மதுரை- பழனி பயணிகள் ரெயில் (வண்டி எண்:56710) ஏப்ரல் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் அரைமணி நேரம் முன்பாக காலை 7.15 மணிக்கு புறப்படும்.

நெல்லை- ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56826) ஏப்ரல் 1 -ந் தேதி முதல் 30-ந்தேதி வரை புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் சேலத்துக்கு 2 மணி நேரம் தாமதமாக செல்லும்.

நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16340) ஏப்ரல் 1 -ந் தேதி முதல் 30-ந்தேதி வரை திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் சேலத்துக்கு அரைமணி நேரம் தாமதமாக செல்லும்.

மதுரை- பிகானீர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:22631) ஏப்ரல் 1 -ந் தேதி முதல் 30-ந்தேதி வரை வியாழன் தோறும் திருச்சிக்கு அரைமணி நேரம் தாமதமாக செல்லும்.

பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56769) ஏப்ரல் 1 -ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மற்றும் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை புதன், சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் விருதுநகர்- நெல்லை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்செந்தூர்- பாலக்காடு பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56770) ஏப்ரல் 1 -ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மற்றும் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை புதன், சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் நெல்லை-விருதுநகர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

குருவாயூர்- புனலூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56365) நாளையும், நாளை மறுநாளும் அரை மணி நேரம் தாமதமாக புனலூர் செல்லும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News