செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்

Published On 2019-03-30 06:48 GMT   |   Update On 2019-03-30 06:48 GMT
குடிநீர் வழங்க கோரி கிராம பொது மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் எதிரே தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட எடம்பேடு கிராமத்தில் சுமார் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு பேரிட்டி வாக்கத்தில் அமைத்துள்ள ராட்சத ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து எடம்பேடுவில் உள்ள உள்ள மேல்நிலை தொட்டிக்கு அனுப்பப்படுகிறது.

அங்கிருந்து குழாய் மூலம் எடம்பேடு கிராமத்துக்கு வினியோகிக்கப்பட்டது. தற்போது பேரிட்டிவாக்கத்தில் உள்ள ஆழ்துளை கிணறு வற்றிவிட்டதால் எடம்பேடு கிராமத்தில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் நடைபெற வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கிராம பொது மக்கள் தூரத்தில் உள்ள வயல்களில் உள்ள பம்பு செட்களுக்கு சென்று குடங்களில் குடிநீரை எடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் செய்தும் தண்ணீர் வரவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வழங்க கோரி கிராம பொது மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் எதிரே தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர்.

பென்னாலூர்பேட்டை போலீசார் மற்றும் ஊராட்சி செயலாளர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடம் சென்று தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்தை நடத்தினார்கள்.

புதிய ஆழ்துளை கிணறு அமைக்க தமிழக அரசு நிதி வழங்கி உள்ளது. ஓரிரு நாட்களில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து தர்ணா போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News