செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் மாமனாரை குத்திக் கொன்ற மருமகன் கைது

Published On 2019-03-27 10:46 GMT   |   Update On 2019-03-27 10:46 GMT
ஒட்டன்சத்திரத்தில் மாமனாரை குத்திக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரசபிள்ளை பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 49). இவர் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவி கலைச் செல்வியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கலைச் செல்வி தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று கலைச் செல்வி நடந்து சென்று கொண்டு இருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த வேலுச்சாமி அவர் மீது மோதினார். இதனால் கலைச் செல்வி கீழே விழுந்து காயமடைந்தார். இதனால் கலைச் செல்வியின் தந்தை கருப்பணகவுண்டர் சம்பவ இடத்துக்கு வந்து மருமகன் வேலுச்சாமியை கத்தியால் குத்தினார். இதனால் ஆத்திரமடைந்த வேலுச்சாமி தனது மாமனார் வைத்திருந்த கத்தியை பறித்து அவரையே குத்தினார்.

படுகாயமடைந்த 2 பேரும் ஒட்டன்சத்திரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் கருப்பணகவுண்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்தனர்.

Tags:    

Similar News