செய்திகள்
வாகன சோதனை நடந்த போது எடுத்த படம்.

தமிழக எல்லையில் பறக்கும் படை சோதனை - வியாபாரியிடம் ரூ.1 3/4 லட்சம் பறிமுதல்

Published On 2019-03-27 06:30 GMT   |   Update On 2019-03-27 06:30 GMT
தமிழக கர்நாடக எல்லையில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கர்நாடக வியாபாரியிடம் இருந்து ரூ.1 3/4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
ஈரோடு:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்த முறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பகுதியில் பறக்கும் படை அலுவலர் செல்வன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நஞ்சுண்டன் கொண்ட குழுவினர் தமிழக கர்நாடக எல்லை பகுதியான பாரதிபுரம், அருள்வாடி பகுதிலும் அதே போல் தொட்டகாஜனூர், சூசைபுரம்,மெட்டல்வாடி, திகனாரை, மல்லன்குழி, பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த வழியாக வரும் கார், பஸ், வேன் வாகனங்களை சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வழியாக வரும் வாகன பதிவு எண், செல் நெம்பர் ஆகிய விபரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

அப்போது தமிழக கர்நாடக எல்லை அருள்வாடி அருகே கர்நாடக பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது.

காரின் உரிமையாளர் சம்பத் கர்நாடக மாநிலம் ஆ‌ஷன் கிராமத்தை சேர்ந்தவர் என்பவர் அருள்வாடி பகுதியில் இருந்து தாளவாடி பகுதிக்கு விதை உருளைக்கிழங்கு பணம் பெற்று செல்வதாக தெரிவித்தார். ஆனால் அதற்கான உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பணத்தை சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக்கிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர். உரிய ஆவணத்தை காட்டி பணத்தை பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர்.  #LokSabhaElections2019
Tags:    

Similar News