செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் - திருவள்ளூர் கலெக்டர்

Published On 2019-03-23 10:21 GMT   |   Update On 2019-03-23 10:21 GMT
தேர்தல் பாதுகாப்பு பணி செய்ய விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். #LSPolls
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, முப்படையைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே தேர்தல் பாதுகாப்பு பணி செய்ய விருப்பம் இருப்போர் பங்கேற்கலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தரத்திலுள்ள முன்னாள் படை வீரர்கள் வரும் ஏப்ரல் 10-ந் தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LSPolls
Tags:    

Similar News