செய்திகள்

மாதவரத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி கல்லூரி மாணவர் பலி

Published On 2019-03-21 09:01 GMT   |   Update On 2019-03-21 09:01 GMT
மாதவரம் ரவுண்டானா அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மாதவரம்:

அம்பத்தூர் வெங்கடாபுரம் பழைய டவுன்ஷிப் ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார். இவர் அ.தி.மு.க. பிரமுகர். இவரது மகன் கவுதம் (வயது 17) சென்னையில் தனியார் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். தனது சகோதரர் ராகுலுடன் மோட்டார் சைக்கிளில் சவுகார் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

மாதவரம் ரவுண்டானா அருகே ஜி.எஸ்.டி சாலையில் வந்தபோது செங்குன்றத்திலிருந்து மாதவரம் நோக்கி சிமெண்ட் கற்கள் ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கவுதம் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராகுல் சிறு காயமும் ஏற்படாமல் உயிர் தப்பினார். கண் முன்னே தம்பி இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ராகுல் பித்துப் பிடித்தது போல் உள்ளார். தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வந்தனர்.
Tags:    

Similar News