செய்திகள்
காரில் சென்ற சித்த மருத்துவரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
ஈரோடு அருகே காரில் சென்ற சித்த மருத்துவரிடம் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு அருகே ரகுபதிநாயக்கன்பாளையம் அவல்பூந்துறை ரோட்டில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி குருசாமி தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் ஈரோட்டில் இருந்து முள்ளாம்பரப்பு நோக்கி சென்ற ஒரு காரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் காரில் உள்ள பொருட்களை சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த ஒரு பெட்டியில் ரூ.1 லட்சத்து 720 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அவர் ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பதும், அவர் சித்த மருத்துவர் என்பதும் தெரியவந்தது. ஆனால் அவர் கொண்டு சென்ற பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதனால் அவரிடம் இருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசனிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறும்போது, “உரிய ஆவணத்தை காண்பித்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் திரும்ப ஒப்படைக்கப்படும்”, என்றார்.
ஈரோடு அருகே ரகுபதிநாயக்கன்பாளையம் அவல்பூந்துறை ரோட்டில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி குருசாமி தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் ஈரோட்டில் இருந்து முள்ளாம்பரப்பு நோக்கி சென்ற ஒரு காரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் காரில் உள்ள பொருட்களை சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த ஒரு பெட்டியில் ரூ.1 லட்சத்து 720 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அவர் ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பதும், அவர் சித்த மருத்துவர் என்பதும் தெரியவந்தது. ஆனால் அவர் கொண்டு சென்ற பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதனால் அவரிடம் இருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசனிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறும்போது, “உரிய ஆவணத்தை காண்பித்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் திரும்ப ஒப்படைக்கப்படும்”, என்றார்.