செய்திகள்

அரக்கோணம் தண்டவாளம் அருகே கார் கவிழ்ந்து விபத்து

Published On 2019-03-01 17:25 IST   |   Update On 2019-03-01 17:25:00 IST
அரக்கோணம் தண்டவாளம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

அரக்கோணம்:

அரக்கோணத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் இவரது மகன் ஆதித்யா (வயது 22). இவர் தனது வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களை காஞ்சிபுரம் அருகே உள்ள வெள்ளகேட் பகுதிக்கு இன்று காலை காரில் அழைத்து சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது இலுப்பைதண்டலம் ரெயில்வே கேட் அருகே கார் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டோடி ரெயில்வே தண்டவாளத்தின் அருகே தலைகீழாக கவிழ்ந்து நின்றது.

இதில் ஆதித்யா அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து தக்கோலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News