செய்திகள்

வம்பாகீரப்பாளையத்தில் விஷப்பூச்சி கடித்ததில் வியாபாரி பலி

Published On 2019-02-24 15:12 GMT   |   Update On 2019-02-24 15:12 GMT
புதுவை வம்பாகீரப்பாளையத்தில் விஷப்பூச்சி கடித்ததில் வியாபாரி பரிதாபமாக இறந்து போனார்.
புதுச்சேரி:

புதுவை வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரத் (வயது26). இவர் புதுவை புல்வார் பகுதியில் தள்ளுவண்டி மூலம் சமைத்த கோழிஇறைச்சி மற்றும் மீன்-மூட்டை பஜ்ஜி போன்ற வகைகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சரத் வியாபாரம் முடிந்ததும் வீட்டுக்கு வந்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வெளியே சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது தன்னை விஷப்பூச்சி கடித்து விட்டதாக கூறி திடீரென மயங்கி விழுந்தார். 
உடனே அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சரத்தை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி சரத் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குபதிவு செய்து சரத்தின் உடலை பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சரத் விஷப்பூச்சி கடித்து இறந்து போனாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவரும்.

இறந்து போன சரத்துக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது. நிறைமதி என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News