செய்திகள்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகள் முன்நோய் தடுப்பு சேவை மையம்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1½ கோடி செலவில் பச்சிளம் குழந்தைகள் முன்நோய் தடுப்பு சேவை மைய கட்டிடம் கட்டும் பணியை எம்.எல்.ஏ.க்கள். தொடங்கி வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண் கதிர் பிரிவு, பச்சிளங்குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்புமுறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது -மூக்கு தொண்டை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
இதனால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும், 800-க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகள் முன்நோய் தடுப்பு சேவை மைய கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சேவை மைய கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி வைத்தனர். இதில் அ.திமு.க. பகுதி செயலாளர்கள் மனோகரன், கேசவமூர்த்தி, ஜெகதீஷ், கோவிந்தராஜ், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ரமாமணி, கண்காணிப்பாளர் பிரபாவதி தேவி, உறைவிட மருத்துவ அதிகாரி ரங்கநாயகி மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண் கதிர் பிரிவு, பச்சிளங்குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்புமுறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது -மூக்கு தொண்டை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
இதனால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் தினமும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும், 800-க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகள் முன்நோய் தடுப்பு சேவை மைய கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சேவை மைய கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி வைத்தனர். இதில் அ.திமு.க. பகுதி செயலாளர்கள் மனோகரன், கேசவமூர்த்தி, ஜெகதீஷ், கோவிந்தராஜ், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ரமாமணி, கண்காணிப்பாளர் பிரபாவதி தேவி, உறைவிட மருத்துவ அதிகாரி ரங்கநாயகி மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.