செய்திகள்
அந்தியூரில் டியூசனுக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் மாயம்
அந்தியூரில் டியூசனுக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவனை தேடி வருகிறார்கள்.
அந்தியூர்:
அந்தியூர், தவுட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி மகன் இளங்கோ (வயது 16). இளங்கோ அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 29-ந் தேதி மாலையில் இளங்கோ டியூசனுக்கு செல்வதாக கூறி விட்டு நெரிஞ்சி பேட்டைக்கு சென்று விட்டு பின்னர் வீட்டுக்கு வந்தார்.
இது பற்றி கேள்வி பட்டதும் இளங்கோ தாய் தீட்டியுள்ளார். பின்னர் மறுநாள் 30ந் தேதி டியூசனுக்கு சென்ற போது இளங்கோ தாய் மீண்டும் தீட்டியுள்ளார்.
இதனால் டியூசனுக்கு செல்வதாக கூறி சென்ற இளங்கோ பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் இளங்கோவை தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.
இது குறித்து இளங்கோ தந்தை அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதவு செய்து மாயமான இளங்கோவை தேடி வருகிறார்கள்.