செய்திகள்

கோவையில் விபத்து - 2 வாலிபர்கள் தலைநசுங்கி பலி

Published On 2019-01-24 12:19 GMT   |   Update On 2019-01-24 12:19 GMT
கோவையில் லாரியில் மோட்டார்சைக்கிள் மீது மோதிய விபத்தில் அவர்களது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
கவுண்டம்பாளையம்:

கோவை கணுவாய் அருகே உள்ளது உழவர் நர்சரி. இங்கு ஆனைகட்டியில் இருந்து கணுவாய் செல்ல ஒரு லாரி புறப்பட்டது. அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். ஒரு இடத்தில் லாரியை முந்திச்செல்ல முயன்றனர்.

அப்போது அதே லாரியில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 வாலிபர்களும் தூக்கிவீசப்பட்டு லாரி சக்கரத்தில் சிக்கினர். இதில் அவர்களது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இது குறித்து தகவல் தெரிந்ததும் தடாகம் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

விசாரணையில் அவர்கள் தஞ்சை மாவட்டம் மேலே நந்தம் உறைய குன்னம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் மாதவன் (வயது 26). சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகன் சதீஷ்குமார் (21) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

அவர்கள் இந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர் என்பது தெரியவந்தது. மாதவனின் மோட்டார் சைக்கிளுக்கு தவணை கட்டாமல் வாகனத்தை பறிமுதல் செய்து விட்டனர். தவணையை செலுத்தி மோட்டார் சைக்கிளை மீட்க புறப்பட்டபோது தான் இந்த விபத்து நடந்தது தெரியவந்தது. #tamilnews
Tags:    

Similar News