செய்திகள்
கஜா புயலால் பாதிப்பு - ஆலங்குடி அங்கன்வாடி மையம் சீரமைக்கப்படுமா? பொது மக்கள் கோரிக்கை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆலங்குடி அங்கன்வாடி மையத்தை சீரமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள், மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaStrom
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வாரப்பூரில் அரசு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சுமார் 30 குழந்தைகள் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஜா புயல் தாக்கியதில் இந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை சேதமடைந்தது. ஆனால் இதுவரை அங்கன்வாடி மையம் சீரமைக்கபடவில்லை. இதனால் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள்.
மேலும் பழுதடைந்த அங்கன் வாடிமையத்தின் மேற்கூரை கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் முன்பு அவற்றை அகற்றி வகுப்புகள் நடைபெறுவதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள், மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaStrom
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வாரப்பூரில் அரசு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சுமார் 30 குழந்தைகள் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஜா புயல் தாக்கியதில் இந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை சேதமடைந்தது. ஆனால் இதுவரை அங்கன்வாடி மையம் சீரமைக்கபடவில்லை. இதனால் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள்.
மேலும் பழுதடைந்த அங்கன் வாடிமையத்தின் மேற்கூரை கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் முன்பு அவற்றை அகற்றி வகுப்புகள் நடைபெறுவதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள், மாணவ- மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #GajaStrom