செய்திகள்

சேத்துப்பட்டு அருகே வாகனம் மோதி விவசாயி பலி

Published On 2019-01-17 10:06 GMT   |   Update On 2019-01-17 10:06 GMT
சேத்துப்பட்டு அருகே வாகனம் மோதி விவசாயி பலியானதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு அருகே உள்ள தத்தனூரை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 57). விவசாயி. இவர் சம்பவத்தன்று ஆரணி சேத்துபட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் காத்தரவராயன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்தகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு காத்தவராயன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News