செய்திகள்

பேகம்பூர் பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வியாபாரி கைது

Published On 2018-12-28 11:19 GMT   |   Update On 2018-12-28 11:19 GMT
பேகம்பூர் பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பதாக தெற்கு பகுதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சேக் தாவூது ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

பேகம்பூர் பிஸ்மி நகரில் சென்றபோது ரியாஸ் அகமது என்பவர் வீட்டில் பதுக்கி கஞ்சாவிற்றது தெரிய வந்தது. அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 1¼ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அதிரடி வேட்டை நடந்து வருகிறது.

Tags:    

Similar News