செய்திகள்

பட்டாசு தொழிலை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு

Published On 2018-12-21 07:46 GMT   |   Update On 2018-12-21 07:46 GMT
பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். #FireCrackers #RajendraBalaji
விருதுநகர்:

பட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி இன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வழக்கில் பிரபல வக்கீல்களை வைத்து தமிழக அரசு வாதாடி வருகிறது. இதன்காரணமாக பட்டாசு தொழிலுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படவில்லை.


பட்டாசு பிரச்சனை குறித்து தமிழக முதல்வரை சந்தித்து உரிய நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். சாதி, மத, அரசியல் பேதமின்றி இங்கு கூடி உள்ளீர்கள். அனைவரும் ஒன்று கூடினால் தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். காத்திருந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.

முதல்வர், பிரதமரை சந்தித்து பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். விரைவில் தேங்காய், பழம் வைத்து பூஜை நடத்தி பட்டாசு ஆலைகள் திறக்கப்படும். எனவே போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். #FireCrackers #RajendraBalaji
Tags:    

Similar News