செய்திகள்

யுவராஜ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - நாமக்கல் கோர்ட்டில் 31-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

Published On 2018-12-18 17:16 GMT   |   Update On 2018-12-18 17:16 GMT
யுவராஜ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை வரும் 31-ந் தேதிக்கு ஒத்திவைத்து நாமக்கல் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
நாமக்கல்:

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி யுவராஜை போலீசார் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் நீதிபதி இளவழகனுக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக யுவராஜ் மீது கோர்ட்டு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட்டு தனபால் வழக்கு விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள யுவராஜ் நேற்று வழக்கு விசாரணைக்காக நாமக்கல் கோர்ட்டுக்கு அழைத்து வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News