செய்திகள்

ஆசிரியர் பயிற்சி தேர்வில் முறைகேடு- தேர்வுத்துறை அதிர்ச்சி

Published On 2018-12-18 05:35 GMT   |   Update On 2018-12-18 05:35 GMT
தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி தேர்வில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #TeacherTrainingExam
சென்னை:

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி தேர்வில் பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. தேர்வு எழுதிய 15000 பேரில் 3000 மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், 2500 பேருக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 7, 8 மதிப்பெண் பெற்றவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.



இந்த விவகாரம் தேர்வுத்துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ஆசிரியர் பயிற்சித் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. #TeacherTrainingExam
Tags:    

Similar News