செய்திகள்

பரமத்திவேலூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்

Published On 2018-12-15 10:07 GMT   |   Update On 2018-12-15 10:07 GMT
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மூப்பனூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சாந்தி (வயது 30). இவர் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் சென்றார். இந்த நிலையில் சாந்தி ஜேடர்பாளையம் அருகே உள்ள குத்தனூர் அருகே உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

நேற்று வழக்கம் போல் வேலை முடிந்து அறைக்கு சென்று தூங்கினார். காலையில் பார்த்த போது சாந்தி மயங்கி கிடந்தார். உடனே சக ஊழியர்கள் அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு அஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்று இன்று காலை சாந்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை வழக்கு பதிவு செய்து அவர் எதற்காக இறந்தார்? வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றார்.
Tags:    

Similar News