செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-12-15 07:16 GMT   |   Update On 2018-12-15 07:16 GMT
பள்ளி மாணவர்களுக்கு கராத்தே போன்ற தற்காப்பு கலை பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #MinisterSengottaiyan
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பாடங்களை பாதியாக குறைக்கப்படும் என்று கூறியுள்ளார். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு முறையில் கரிகுலம் என்று சொல்லப்படுகிற பாடங்களை உருவாக்குகின்றது.

தமிழகத்தில் இந்த ஆண்டு கொண்டு வருகிற புதிய பாடத்திட்டம் இந்தியாவே வியக்கும் அளவிற்கு இருக்கிறது. இனி கல்லூரிகளுக்கு சென்றால் கூட அவர்கள் பாட திட்டத்தை மாற்றம் செய்ய வேண்டிய அளவிற்கு உருவாகி உள்ளது.

வருகிற நிதி ஆண்டில் பாடங்களை குறைத்து தேர்வை செயல்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. மாணவர்களுக்கு கூடுதல் சுமை உள்ளதாகவும் நாட்கள் போதவில்லை என்றும் கோரிக்கைகள் வந்துள்ளது. இதை அரசு பரிசீலனை செய்து வருகிறது.

மத்திய மந்திரி கூறியிருப்பது சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மட்டும் தான். அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் போன்ற பள்ளிகளுக்கு அவரவர் சிலபஸ் என்பது தனி வகையாக இருந்து வருகிறது.



மத்திய அரசின் மாணவர்கள் திறனாய்வு தகுதி தேர்வுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மாணவர்களுக்கு நீச்சலை பெற்றோர்கள் கற்றுத் தரவேண்டும். கராத்தே போன்ற தற்காப்பு கலை பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வருவதை தடுக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
Tags:    

Similar News