செய்திகள்

புதுவை அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2018-12-03 12:53 GMT   |   Update On 2018-12-03 12:53 GMT
புதுவை அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான நாவற்குளம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் ஹரிதா (வயது19). இவர் புதுவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

ஹரிதா ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்ததாக தெரிகிறது. இதனால் சோகத்தில் இருந்து வந்த ஹரிதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சம்பவத்தன்று அவர் வி‌ஷத்தை குடித்து விட்டார்.

இதில் மயங்கி விழுந்த ஹரிதாவை அவரது பெற்றோர் மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு ஹரிதா பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News