செய்திகள்

வெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை

Published On 2018-12-02 21:04 IST   |   Update On 2018-12-02 21:04:00 IST
தருமபுரி மாவட்டத்தில் வெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வெற்றிலைகள் நல்லம்பள்ளிக்கு எடுத்து வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெற்றிலை விலை மிகவும் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். 

ஏற்கனவே ஒரு கட்டு வெற்றிலை ரூ.50க்கு விற்கப்பட்டது. இன்று ஒரு கட்டு வெற்றிலை ரூ.10 முதல் ரூ.20 வரை விலை போனது. இந்த வெற்றிலைகள் தருமபுரியில் இருந்து ஈரோடு, சேலம், கொங்கணாபுரம், எடப்படி உள்ளிட்டட பல்வேறு பகுதிகளுக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
Tags:    

Similar News