செய்திகள்
தவளக்குப்பம் அருகே கடைக்கு சென்ற இளம்பெண் மாயம்
தவளக்குப்பம் அருகே கடைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
பாகூர்:
தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை, தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் சரண்யா (வயது21). இவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சரண்யா தனது தாய் மகேஸ்வரியிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடு உள்ளிட்ட பலஇடங்களில் தேடியும் எங்கும் சரண்யா இல்லை.
இதையடுத்து மகேஸ்வரி தனது மகள் மாயமானது குறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சரண்யாவை யாராவது கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.