செய்திகள்

ஆம்பூர் அருகே பைக் திருடிய 3 பேர் கைது

Published On 2018-11-30 16:49 IST   |   Update On 2018-11-30 16:50:00 IST
ஆம்பூர் அருகே பைக் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர்:

ஆம்பூர் பேபி காலனி பகுதியில் ஆம்பூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகபடும்படி சுற்றிதிரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த முகமது முஸ்தபா (வயது 18). தன்சூர் அகமது (19). நூரில் அமின் (23). என்பது தெரிய வந்தது.

மேலும் ஆம்பூர் சுற்று வட்டார பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News