செய்திகள்

ராஜபாளையம்-வெம்பக்கோட்டை சாலையில் ரெயில்வே மேம்பால பணி - தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2018-11-29 17:53 GMT   |   Update On 2018-11-29 17:53 GMT
ராஜபாளையம்- வெம்பக்கோட்டை சாலையில் ரெயில்வே மேம்பாலபணியை தங்கப் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ராஜபாளையம்:

ராஜபாளையம்- வெம்பக்கோட்டை சாலையில் ரெயில்வே மேம்பாலபணியை தங்கப் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

ராஜபாளையம்-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பணியை நேற்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது மேம்பாலம் பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் செல்ல பாலத்தின் இருபுறமும் பாதை அமைத்து தருமாறு மதுரை கண்காணிப்பு பொறியாளர் பழனியப்பனிடம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார். மேலும் பணிக்கு பயன்படுத்தப்படும் மணல், கம்பிகள் தரமாக உள்ளதா என கேட்டார். அதற்கு கண்காணிப்பு பொறியாளர், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மணல் தான் எனவும், தரமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மேம்பாலம் காலங்காலமாக உறுதியாக இருக்க வேண்டும். அதற்காக மேம்பாலம் அமைக்கும் பணியை நான் தினந்தோறும் கூட பார்வையிடுவேன் என்றார்.

அப்போது கோட்ட பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர் விஜயா, தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் தங்கச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News