செய்திகள்

வேலூரில் நாளை மின்நிறுத்தம்

Published On 2018-11-28 22:49 IST   |   Update On 2018-11-28 22:49:00 IST
வேலூரில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

வேலூர்:

வேலூர் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் புதிய பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன், பஜார், சலவன்பேட்டை, அண்ணாசாலை, கஸ்பா, ஊசூர், விரிஞ்சிபுரம், செதுவாலை, கொணவட்டம், சேண்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News