செய்திகள்

வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்- புரோக்கர் உள்பட 5 பெண்கள் கைது

Published On 2018-11-27 13:05 GMT   |   Update On 2018-11-27 13:05 GMT
கோவை சித்தாபுதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்தி வந்த புரோக்கர் உள்பட 5 பெண்கள் போலீசார் கைது செய்தனர்.
கோவை சித்தாபுதூர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அந்த வீட்டை கண்காணித்து வந்தனர்.

அங்கு விபசாரம் நடப்பதை உறுதி செய்த போலீசார் நேற்று வீட்டில் இருந்த ஒரு ஆண் மற்றும் 5 பெண்களை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பி.என்.பாளையத்தை கண்ணன்(52), சூலூர் சுமதி (45), சரவணம்பட்டி நாகமணி (37), சோமனூர் ‌ஷப்னா(27), எட்டிமடை ரேகா(29), பல்லடம் மகேஸ்வரி(26) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

கண்ணன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார். அவரையும், 5 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News