செய்திகள்
மேலப்பாளையத்தில் பெண்ணை அவதூறாக பேசிய கொழுந்தன் கைது
மேலப்பாளையத்தில் குடிபோதையில் பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த கொழுந்தனை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
மேலப்பாளையம் கணேசபுரத்தை சேர்ந்தவர் கனக சபாபதி. இவரது மனைவி தேவகி (வயது51). இவருக்கும் இவரது கொழுந்தன் சிவா (38) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த சிவா, தேவகியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து தேவகி மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.