செய்திகள்

புழல் ஏரி அருகே 25 மூட்டைகளில் வீசப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள்

Published On 2018-11-26 08:15 GMT   |   Update On 2018-11-26 08:15 GMT
சென்னை புழல் ஏரி அருகே 25 மூட்டைகளில் பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை கத்தை கத்தையாக வெட்டி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #OldBankNotes #Demonetisation
சென்னை:

பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்புநீக்க நடவடிக்கையை அறிவித்தார். நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டன.

பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு,  அதற்கான காலக்கெடு விதிக்கப்பட்டது. பழைய நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. மொத்தமாக கையிருப்பு வைத்திருந்தவர்கள், வருமானத்தை கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்தவர்களால் வங்கிகளில் நேரடியாக செலுத்தி பணத்தை மாற்ற முடியவில்லை. இதனால் பலர் ரூபாய் நோட்டுக்களை குப்பையில் வீசினர்.


இந்நிலையில், சென்னையை அடுத்த புழல் ஏரி அருகே இன்று 25 மூட்டைகளில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ருபாய் நோட்டுக்கள் கிடந்தன. அந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்தன. இது அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நோட்டுக்களை வெட்டி வீசியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மத்திய அரசு அறிவித்த காலக்கெடு முடிந்தபிறகு செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வைத்திருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  #OldBankNotes #Demonetisation
Tags:    

Similar News