செய்திகள்
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டியல் பணத்தை வழங்கிய 1-ம் வகுப்பு மாணவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேலத்தை சேர்ந்த 1-ம் வகுப்பு மாணவி உண்டியல் பணத்தை வழங்கினார். #GajaCyclone
கொண்டலாம்பட்டி:
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமுதா. இவரது மகள் ஹமிதா (வயது 5). தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தனது தாயார் கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேகரித்து வந்தார். இதன்மூலம் மொத்தம் 2 ஆயிரம் ரூபாய் சேர்ந்தது.
இந்த நிலையில் அந்த உண்டியல் பணத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஹமிதா தனது தாயாருடன் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணியை சந்தித்து வழங்கினார்.
அதை பெற்றுக் கொண்ட கலெக்டர் ரோகிணி அந்த சிறுமியை பாராட்டினார். மேலும் இச்சிறுமியை போல மற்றவர்களும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். #GajaCyclone
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமுதா. இவரது மகள் ஹமிதா (வயது 5). தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தனது தாயார் கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேகரித்து வந்தார். இதன்மூலம் மொத்தம் 2 ஆயிரம் ரூபாய் சேர்ந்தது.
இந்த நிலையில் அந்த உண்டியல் பணத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஹமிதா தனது தாயாருடன் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணியை சந்தித்து வழங்கினார்.
அதை பெற்றுக் கொண்ட கலெக்டர் ரோகிணி அந்த சிறுமியை பாராட்டினார். மேலும் இச்சிறுமியை போல மற்றவர்களும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். #GajaCyclone