செய்திகள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி

Published On 2018-11-19 10:18 GMT   |   Update On 2018-11-19 10:18 GMT
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மதுரை:

திண்டுக்கல் மாவட்டம் சானார்பட்டியைச் சேர்ந்தவர் சேக்இப்ராகிம். இவரது மகள் சுல்தான் பேகம் (வயது28). சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். காய்ச்சல் குணமாகவில்லை.

எனவே மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் சுல்தான்பேகம் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

எனவே அவரை தனி வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சுல்தான்பேகம் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

பன்றிகாய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #Swineflu
Tags:    

Similar News