செய்திகள்
வரும் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்- வானிலை ஆய்வு மையம்
தெற்கு வங்கக்கடலில் நவம்பர் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #GajaCyclone #TNRains
சென்னை :
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கஜா புயல் காலை 11 மணிக்கு வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆனது. தெற்கு வங்கக்கடலில் நவம்பர் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
மீனவர்கள் இன்று மதியம் முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம். நவ.18 முதல் 20-ம் தேதி வரை மீனவர்கள் வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TNRains
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கஜா புயல் காலை 11 மணிக்கு வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆனது. தெற்கு வங்கக்கடலில் நவம்பர் 18-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, நாமக்கல், மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TNRains