செய்திகள்

மர்ம காய்ச்சலால் விவசாயி உயிரிழப்பு

Published On 2018-11-14 12:26 GMT   |   Update On 2018-11-14 12:26 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயி சிகிகச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை அருகே உள்ளது தொட்டதிம்மன அள்ளி. இங்குள்ள நெருப்புகுட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பா (36). விவசாயி கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இவர், ஒசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் தீவிர சகிச்சைக்காக பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிகச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் குழுவினர் நெருப்புகுட்டை கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்கள். #tamilnews
Tags:    

Similar News