செய்திகள்

ஆம்பூர் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2018-11-11 15:12 GMT   |   Update On 2018-11-11 15:12 GMT
ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆம்பூர்:

ஆம்பூர் அருகே உள்ள வடச்சேரி பகுதியை சேர்ந்தவர் விஜய் இவரது மனைவி சங்கீதா (வயது 40). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. தம்பதிக்கு 1 மகள் உள்ளார்.

விஜய், சங்கீதாவிற்கு கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே மனமுடைந்த சங்கீதா வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் சங்கீதாவை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர்.

அங்கு சங்கீதா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உமராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சங்கீதாவிற்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் திருப்பத்தூர் உதவி-கலெக்டர் பிரியங்கா விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News