செய்திகள்

ஆம்பூர் அருகே மூதாட்டியை கொன்ற தொழிலாளி கைது

Published On 2018-11-08 10:36 GMT   |   Update On 2018-11-08 10:36 GMT
ஆம்பூர் அருகே மூதாட்டியை கொன்ற தொழிலாளியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:

ஆம்பூர் அருகே தேவலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணியம்மாள் (வயது 60). இவர் கடந்த 4-ந் தேதி இரவு வழக்கம் போல தேவலாபுரம் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் உள்ள ரே‌ஷன் கடையில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மணியம்மாள் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மறுநாள் இதனை பார்த்த பொதுமக்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூட்டுறவு சங்க கட்டிடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆம்பூர் அருகே விண்ணமங்கலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி குணசேகரன் (வயது 32) என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. குணசேகரனுக்கு உறவினர்கள் யாரும் கிடையாது. அவரும், அதே ரே‌ஷன் கடையில் தூங்குவது வழக்கம். சம்பவத்தன்று அங்கு தூங்கும்போது மணியம்மாளுக்கும், குணசேகரனுக்கும் தகராறு ஏற்பட்டு, அப்போது ஆத்திரத்தில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து குணசேகரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News