செய்திகள்

குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

Published On 2018-11-04 17:59 GMT   |   Update On 2018-11-04 17:59 GMT
குற்ற சம்பவங்களை தடுக்க நகரின் முக்கிய இடங்களில் ரூ.1 லட்சம் மதிப்பில் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
ஸ்ரீமுஷ்ணம்:

ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் இரவு நேரங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து விட்டதால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு ஸ்ரீமுஷ்ணம் வர்த்தகர்கள் நல சங்கம் சார்பில் ஸ்ரீமுஷ்ணம் நகரின் முக்கிய இடங்களில் ரூ.1 லட்சம் மதிப்பில் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இதனை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி ஸ்ரீமுஷ்ணம் காந்தி சிலை அருகே நடைபெற்றது. இதற்கு வர்த்தக சங்க தலைவர் சோக்கு சிவானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் தங்க.பன்னீர்செல்வம் வரவேற்றார். அரிமா சங்க செயலாளர் பூவராகமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு கணினிகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன், வர்த்தகர் சங்க பிரமுகர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வர்த்தக சங்க பொருளாளர் தங்கராசு நன்றி கூறினார். 
Tags:    

Similar News