செய்திகள்

ரெயிலில் பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த வாலிபர் கைது

Published On 2018-11-02 12:12 GMT   |   Update On 2018-11-02 12:12 GMT
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விருத்தாசலம்:

சென்னை திருவெற்றியூரைச் சேர்ந்தவர் சிவகணேஷ் (வயது 37). தனியார் நிறுவன ஊழியர். இவர் தன்னுடைய மனைவி தனலட்சுமி (34) மற்றும் குடும்பத்தினருடன் திண்டுக்கல்லில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை புறப்பட்டனர்.

அப்போது அவர்கள் பயணம் செய்த ரெயில் பெட்டியில் பயணம் செய்த ஒரு வாலிபர் தனலட்சுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. உடன் தனலட்சுமி விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இறங்கி இருப்புப்பாதை போலீசில் புகார் செய்தார். 

சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் திண்டுக்கல் அருகே உள்ள சித்தையன்கோட்டையைச் சேர்ந்த அகமத்துல்லா (37) என்பது தெரியவந்தது. உடன் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News