செய்திகள்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு 50 பேர் அனுமதி

Published On 2018-10-30 09:48 GMT   |   Update On 2018-10-30 09:48 GMT
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 50 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடு-வீடாகபுகுந்து ஆய்வு செய்கிறார். வீடுகளில் தேங்கி உள்ள தண்ணீரில் ஆய்வு செய்து டெங்குவை பரப்பும் கொசுவை கண்டறிந்து அதை ஒழிக்க உத்தரவிட்டு வருகிறார்.

மாவட்டம் முழுவதும் சுகாதார பணியாளர்களின் தீவிர நடவடிக்கையால் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் பொதுமக்களில் பலர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். சளி, இருமல் மற்றும் வி‌ஷக்காய்ச்சலால் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 50 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News