செய்திகள்
அரக்கோணம் அருகே வீடு புகுந்து இளம்பெண் கற்பழித்து கொலை
அரக்கோணம் அருகே இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை காந்தி நகரை சேர்ந்தவர் செல்வி (வயது 30). இவரது கணவர் பாபு, சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், 8 வயது மகனுடன் வசித்து வந்தார். திருத்தணி அருகில் உள்ள ஒரு ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் செல்வி வேலை செய்துவந்தார்.
செல்வி நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் செல்வியை கற்பழிக்க முயன்றுள்ளனர். செல்வி தப்பிக்க முயன்றதாக தெரிகிறது.
ஆத்திரமடைந்த கும்பல், அவரை தாக்கி வலுகட்டாயமாக கற்பழித்துள்ளனர். பின்னர், கழுத்தை நெரித்து செல்வியை கொடூரமாக கொலை செய்தனர். உடலை நிர்வாணமாக போட்டுவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
செல்வியின் உடலை அவரது மகன் தான் முதலில் பார்த்தார். இந்த சிறுவனின் கதறல் சத்தம் கேட்ட பிறகே அக்கம், பக்கத்தினர் வீட்டு முன்பு குவிந்தனர். இதுபற்றி அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார், கள்ளக்காதல் தகராறில் செல்வி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை காந்தி நகரை சேர்ந்தவர் செல்வி (வயது 30). இவரது கணவர் பாபு, சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், 8 வயது மகனுடன் வசித்து வந்தார். திருத்தணி அருகில் உள்ள ஒரு ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் செல்வி வேலை செய்துவந்தார்.
செல்வி நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் செல்வியை கற்பழிக்க முயன்றுள்ளனர். செல்வி தப்பிக்க முயன்றதாக தெரிகிறது.
ஆத்திரமடைந்த கும்பல், அவரை தாக்கி வலுகட்டாயமாக கற்பழித்துள்ளனர். பின்னர், கழுத்தை நெரித்து செல்வியை கொடூரமாக கொலை செய்தனர். உடலை நிர்வாணமாக போட்டுவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
செல்வியின் உடலை அவரது மகன் தான் முதலில் பார்த்தார். இந்த சிறுவனின் கதறல் சத்தம் கேட்ட பிறகே அக்கம், பக்கத்தினர் வீட்டு முன்பு குவிந்தனர். இதுபற்றி அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்த போலீசார், கள்ளக்காதல் தகராறில் செல்வி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews