செய்திகள்
தக்கலை அருகே மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி
தக்கலை அருகே மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலியானதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மருதவிளை பகுதிக்கு நேரில் சென்று அவர் எந்த மாதிரியான காய்ச்சலால் இறந்தார்? என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.
தக்கலை:
தக்கலை அருகே உள்ள பறைக்கோடு மருதவிளையைச் சேர்ந்தவர் ஜஸ்டஸ். இவர் வெளிநாட்டில் கேட்டரிங் பணி புரிந்து வருகிறார்.
இவரது மனைவி ஜெபஸ்லின் ஜெனிஷா (வயது 29). இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.
ஜெபஸ்லின் ஜெனிஷா திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்திருந்த அவரது கணவர் ஜஸ்டஸ், முதலில் இங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தார். ஆனால் காய்ச்சல் குணமாகாததால் ஜெனிஷாவை அவர் திருவனந்தபுரம் அழைத்துச் சென்று அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
அவர் எந்த மாதிரியான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்? என்பது தெரியவில்லை. அவரது ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்ததாலேயே அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஜெனிஷா இறந்தது பற்றி குமரி மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள் மருதவிளை பகுதிக்கு நேரில் சென்று ஜெனிஷா எந்த மாதிரியான காய்ச்சலால் இறந்தார்? என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் வேறு யாரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது பற்றியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தக்கலை அருகே உள்ள பறைக்கோடு மருதவிளையைச் சேர்ந்தவர் ஜஸ்டஸ். இவர் வெளிநாட்டில் கேட்டரிங் பணி புரிந்து வருகிறார்.
இவரது மனைவி ஜெபஸ்லின் ஜெனிஷா (வயது 29). இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.
ஜெபஸ்லின் ஜெனிஷா திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்திருந்த அவரது கணவர் ஜஸ்டஸ், முதலில் இங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தார். ஆனால் காய்ச்சல் குணமாகாததால் ஜெனிஷாவை அவர் திருவனந்தபுரம் அழைத்துச் சென்று அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
அவர் எந்த மாதிரியான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்? என்பது தெரியவில்லை. அவரது ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்ததாலேயே அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஜெனிஷா இறந்தது பற்றி குமரி மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுகாதாரத்துறை அதிகாரிகள் மருதவிளை பகுதிக்கு நேரில் சென்று ஜெனிஷா எந்த மாதிரியான காய்ச்சலால் இறந்தார்? என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் வேறு யாரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது பற்றியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.