செய்திகள்

வேலூரில் கிணற்றில் தவறி விழுந்து 90 வயது மூதாட்டி பலி

Published On 2018-10-04 10:57 GMT   |   Update On 2018-10-04 10:57 GMT
வேலூரில் கிணற்றின் சுவர் மீது உட்கார்ந்திருந்த 90 வயது மூதாட்டி திடீரென தவறி விழுந்து பலியானார்.

வேலூர்:

வேலூர் தொரப்பாடி கோவில் மாணியம் தெருவை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி சிவகாமி (வயது 90). இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் சிவகாமி தன்னுடைய மகள் வள்ளி வீட்டில் வசித்து வந்தார்.

இன்று காலை வீட்டின் அருகேயுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பொது கிணற்றின் சுவர் மீது உட்கார்ந்திருந்தார்.

அப்போது திடீரென தவறி கிணற்றில் விழுந்து விட்டார். இதை கண்ட உறவினர்கள் உடனடியாக வேலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மூதாட்டியை கிணற்றில் இருந்து மீட்டனர். ஆனால் தண்ணீரில் மூழ்கிய சிவகாமி இறந்து விட்டார். பாகாயம் போலீசார் வழக்குபதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக மூதாட்டி உடலை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News