செய்திகள்
ராஜபாளையம் அருகே போலீஸ்காரர் விபத்தில் பலி
ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சொம்பக்குளத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28). இவர் ராஜபாளையம் 11-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருந்தார்.
தினமும் ரமேஷ் மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று இரவு பணி முடித்துவிட்டு ரமேஷ் ஊருக்கு புறப்பட்டார்.
ஆலங்குளம் ரோட்டில் வந்துகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த ரமேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சொம்பக்குளத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28). இவர் ராஜபாளையம் 11-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருந்தார்.
தினமும் ரமேஷ் மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று இரவு பணி முடித்துவிட்டு ரமேஷ் ஊருக்கு புறப்பட்டார்.
ஆலங்குளம் ரோட்டில் வந்துகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த ரமேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.