செய்திகள்

ஆண்டிப்பட்டி பகுதியில் மது விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

Published On 2018-10-03 14:21 GMT   |   Update On 2018-10-03 14:21 GMT
ஆண்டிப்பட்டி பகுதியில் மது விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆண்டிப்பட்டி:

காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று தமிழகத்தில் டாஸ்மாக் கடை உள்பட அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இருந்தபோதும் சிலர் மொத்தமாக மதுபாட்டில்களை கொள்முதல் செய்து பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர்.

கண்டமனூர் சப்-இன்ஸ் பெக்டர் சுல்தான் பாட்சா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தெற்கு தெருவில் வீட்டில் பதுக்கி மது விற்ற ரத்தினம்மாள், ராஜா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 65 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் மயிலாடும்பாறை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ரோந்து சென்றபோது சுடுகாடு அருகே மது விற்ற குமணன் தொழுவை சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்து 199 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஆண்டிப்பட்டி போலீசார் ரோந்து சென்றபோது வைகை அணை பகுதியில் மது விற்ற ஜெயமங்கலத்தை சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News