செய்திகள்

ஐபிஎஸ் அதிகாரிகள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

Published On 2018-10-03 07:44 GMT   |   Update On 2018-10-03 07:44 GMT
சாரங்கன் உள்பட ஐபிஎஸ் அதிகரிகள் நான்கு பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை :

ஐபிஎஸ் அதிகாரிகள் சாரங்கன், பிரமோத் குமார், சுமித் சரன் மற்றும் பெரியப்பா ஆகிய 4 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை மாநகர ஆணையராக சுமித் சரண், கோவை மேற்கு மண்டல ஐஜியாக பெரியப்பா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், காவல்துறை பயிற்சியக ஐஜியாக சாரங்கன், மண்டபம் ஐஜியாக பிரமோத் குமார் நியமிக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Tags:    

Similar News