செய்திகள்

நாசரேத் அருகே கோஷ்டி மோதல்- 6 பேர் கைது

Published On 2018-10-01 14:02 GMT   |   Update On 2018-10-01 14:02 GMT
நாசரேத் அருகே பெண்ணை அவதூறாக பேசிய தகராறில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாசரேத்:

நாசரேத் அருகில் உள்ள ஆசீர்வாதபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 23). இவரது தங்கையை உடையார்குளம் காந்திநகரை சேர்ந்த சூர்யா என்பவர் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனை சதீஷ்குமார், சூர்யா மற்றும் அவரது அண்ணன் முத்துசெல்வம் ஆகியோரிடம் தட்டி கேட்டார்.

 இதனால் அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது குறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில் நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து சூர்யா (19) அவரது அண்ணன் முத்து செல்வம் (23) ஆகிய 2 பேரை கைது செய்தார். 

முத்துசெல்வம் அளித்த புகாரின் பேரில் சதீஷ்குமார், பிள்ளையன்மனை வடக்கூரைச் சேர்ந்த தமிழ்செல்வன் (20), செல்வமுருகன் (21), பாஸ்கர் (42) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News